10 Mar 2007

செய்யது எம். சலாஹுதீன் - தொழில் முனைப்பாளர்களின் உத்வேகம்




செய்யது எம். சலஹுதீன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக நகரான துபாயில் வசிக்கும் இந்தியர். இந்திய அரசின் வெளி நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோரும் நடத்தப்படும் பிரவாசி பாரதிய திவாஸ் என்ற விழாவின் 2007 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சியின் கடைசி நாளான கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம், நாள் புது டில்லியில், மேதகு இந்திய ஜனாதிபதி திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களினால் சிறந்த இந்திய தொழில்ஜீவிக்கான விருது பெற்றவர்
துபாயை தலமையிடமாக கொண்ட ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஈ.டி.ஏ. ஸ்டார் தொழில் குழுமங்களின் மேலான்மை நிர்வாகியான செய்யது.எம். சலாஹுதீன் அவர்களின் அயராத உழைப்பும், தீவிர தொழில் ஈடுபாடும், எதர்த்த நிர்வாக முடிவுகளும்,தொலை நோக்க பார்வை கொண்ட திட்டமிடுதலும், குறிப்பறிந்து அளவளாவும் தன்மையும், சமூகம்,பன்பாடு சார்ந்த தொழில்முறை பானி என பல் வேறு வகைப்பட்ட தனிதன்மையின் மொத்த உருவமாக திகழ்கிறார். கடந்த 37 வருடங்களாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் செய்யது எம். சலாஹுதீன் அவர்களின் மேலான்மைதிறனுக்கு சாட்சியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் பனிபுரியும் ஆலமரமாக இன்று ஈ.டி.ஏ நிறுவனம் திகழ்கிறது. இத்தகைய பெரும் தொழில் சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட வள்ளல் பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்களினால் தொழிலுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை இன்றும் நினவு கூறும் இவரின் அளப்பறிய பணி அமீரக அரசினால் பலமுறை அங்கீகரிக்கப்பட்டும், கௌரவிக்கப்பட்டும் வந்துள்ளது.
செய்யது எம். சலாஹுதீன் அவர்கள் தென் தமிழகத்தின் சேதுபதி சீமை என அறியப்பட்ட இரம நாதபுரம் மவட்டம் கீழக்கரையில் 1940 ஆம் அன்டுகளின் தொடக்கத்தில் பிறந்தவர், தனது பள்ளி படிப்பினை கீழக்கரையிலும்,கல்லூரி படிப்பினை சென்னையிலும் பயின்றவர், தனது இளமை காலத்தில் இலட்ச்சிய நோக்கம் கொன்டு இலங்கை, மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு பயனம் மேற்கன்டவர். சமுதாய நலனில் ஆர்வம் கொணடு இவர் ஆற்றிய பனிகளும், கல்வி மற்றும் வளர்ச்சி பனியில் இவரின் அக்கரையுமே இத்தகைய பெரும் விருதால் இவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது உண்மை.


No comments:

Post a Comment