4 Nov 2007

ஆட்டோடெக் முகைதீன் - 4 ஆம் ஆன்டு நினைவு நாள்.

மலர்ந்தது : 29 மே 1970 உதிர்ந்தது : 04 நவம்பர் 2003

மறைந்து நாலான்டுகள் சக்கரமாக சுழன்று விட்டலும் எம் நினைவுகள் உம்மையே சுற்றி வருகிறதே..

10 Mar 2007

செய்யது எம். சலாஹுதீன் - தொழில் முனைப்பாளர்களின் உத்வேகம்




செய்யது எம். சலஹுதீன், ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக நகரான துபாயில் வசிக்கும் இந்தியர். இந்திய அரசின் வெளி நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோரும் நடத்தப்படும் பிரவாசி பாரதிய திவாஸ் என்ற விழாவின் 2007 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சியின் கடைசி நாளான கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம், நாள் புது டில்லியில், மேதகு இந்திய ஜனாதிபதி திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களினால் சிறந்த இந்திய தொழில்ஜீவிக்கான விருது பெற்றவர்
துபாயை தலமையிடமாக கொண்ட ஈ.டி.ஏ அஸ்கான் மற்றும் ஈ.டி.ஏ. ஸ்டார் தொழில் குழுமங்களின் மேலான்மை நிர்வாகியான செய்யது.எம். சலாஹுதீன் அவர்களின் அயராத உழைப்பும், தீவிர தொழில் ஈடுபாடும், எதர்த்த நிர்வாக முடிவுகளும்,தொலை நோக்க பார்வை கொண்ட திட்டமிடுதலும், குறிப்பறிந்து அளவளாவும் தன்மையும், சமூகம்,பன்பாடு சார்ந்த தொழில்முறை பானி என பல் வேறு வகைப்பட்ட தனிதன்மையின் மொத்த உருவமாக திகழ்கிறார். கடந்த 37 வருடங்களாக அமீரகத்தில் வாழ்ந்து வரும் செய்யது எம். சலாஹுதீன் அவர்களின் மேலான்மைதிறனுக்கு சாட்சியாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் பனிபுரியும் ஆலமரமாக இன்று ஈ.டி.ஏ நிறுவனம் திகழ்கிறது. இத்தகைய பெரும் தொழில் சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட வள்ளல் பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்களினால் தொழிலுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை இன்றும் நினவு கூறும் இவரின் அளப்பறிய பணி அமீரக அரசினால் பலமுறை அங்கீகரிக்கப்பட்டும், கௌரவிக்கப்பட்டும் வந்துள்ளது.
செய்யது எம். சலாஹுதீன் அவர்கள் தென் தமிழகத்தின் சேதுபதி சீமை என அறியப்பட்ட இரம நாதபுரம் மவட்டம் கீழக்கரையில் 1940 ஆம் அன்டுகளின் தொடக்கத்தில் பிறந்தவர், தனது பள்ளி படிப்பினை கீழக்கரையிலும்,கல்லூரி படிப்பினை சென்னையிலும் பயின்றவர், தனது இளமை காலத்தில் இலட்ச்சிய நோக்கம் கொன்டு இலங்கை, மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு பயனம் மேற்கன்டவர். சமுதாய நலனில் ஆர்வம் கொணடு இவர் ஆற்றிய பனிகளும், கல்வி மற்றும் வளர்ச்சி பனியில் இவரின் அக்கரையுமே இத்தகைய பெரும் விருதால் இவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது உண்மை.


2 Feb 2007

சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் - நினைவுகள்

15-02-1945 - 02-02-2006

தென் தமிழக கட்லோர மாவட்டமான இராமனாதபுரம் பகுதியில் எஸ்.எம்.ஏ என அறியப்பட்ட பஷீர் முகைதீன் அவர்கள் காலமாகி ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அவர் சார்ந்த சமூகம் மற்றும் பகுதி மக்கள் அவரை நினைவு கூறும் முகமாக அவரை பற்றிய சிறு குறிப்புகள்:


பஷீர் முகைதீன் அவர்கள் தமிழக தென் பகுதி கடலோரப் புரதான பகுதியான கீழக்கரையில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பினை இலங்கை தலை நகர் கொழும்புவிலும், பின் இந்தியாவில் இராமனாதபுரம் இராஜா உயர் நிலை பாடசாலையிலும்,தொடர்ந்து திருச்சி பிஷப் கேபர் பள்ளியிலும் தனது இள் நிலை அறிவியல் (இயற்பியல்) பட்டப்படிப்பினை புகழ் பெற்ற சென்னை கிருஷ்துவ கல்லூரியிலும் படித்தவர்.


பாரம்பரியமிக்க கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத்தில் பிறந்த இவர் தனதி இளமை முதல் கடல் வாழ் உயிரினங்களின் மீது அளவில்லாத ஈடுபாடு கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சியினில் சிறப்பு நிபுனத்துவம் கொண்டிருந்தார் என்றால் மிகயாகாது தங்களது முன்னோர்களின் தொழிலான முத்து சிலாபம் மற்றும் சங்குகுளித் தொழிலில் ஈடுபட்டு திறனுடன் சிறப்பாக நிர்வாகித்து வந்தார். எவ்வளவு அறியவகை கடல் வாழ் உயிரினத்தையும் பார்த்த மாத்திரத்தில் அடயாளம் கண்டு அதன் விபரங்களை சொல்வதில் அவருக்கு நிகர் அப்பகுதியில் எவரும் இல்லை என்பது தின்னம்.


இத்த்கைய தொழிலில் தொடர்புடைய ஐரோப்பிய மற்றும் கீழ்திசை நாடுகளை சார்ந்த வர்த்தகர்கள் இவருடன் கல்ந்துரையாட அவ்வப்பொழுது கீழக்கரைக்கு விஜயம் செய்வதை இப்பகுதி மக்கள் இன்றும் நிணவு கூறுவது இவரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.சமுதாய பனிகளில் தீராததாகம் கொன்ட பஷீர் முகைதீன் அவர்கள் அனைத்து அரசியல் கட்சியுனுடனும், சமுதய மக்களினுடனும் நல்லிணக்கம் கொன்டிருத்தார். சமூக நல்லினக்கத்தை இவர் கீழக்கரையில் ஏற்படுத்துவதில் தனது இறுதி காலம் வரை பெறும் முயற்சியில் ஈடுபட்டது இன்றும் போற்றத்தகதாக கருதப்ப்டுகிறது.


"கிட்டங்கி"என அழைக்கப்படும் இவரது அலுவலகத்தில் சமூகத்தில் ஏற்படும் கடும் சிக்கலான விவகாரங்களுக்கு தனடு எதார்த்தமான அணுகு முறையாலும் மற்றும் சட்டரீதியான அனவரும் ஏற்கக்கூடிய தீர்வை சொல்லுவதிலும் இவர் திறன் பெற்றிருந்தது இப் பகுதியினருக்கு மிகவும் உத்வியாக இருந்தது உண்மை. தெளிவாக விபரங்களை உணர்ந்து கொள்ளுவதும், விழிப்புடன் அதனை ஆராய்வதிலும்,சரியான முடிவெடுப்பதிலும், சாதக பாதகங்களை அறிந்திருத்தலிலும் சிறப்பு நிபுனத்துவம் கொன்ட ஒரு மேலான்மை தத்துவத்தின் மொத்த உருவம்தான் பஷீர் முகதீன் அவர்கள். தூய பழக்க வழக்கமும், எளிமையான வெண்ணிற ஆடை அனிவதும், நேர ஒழுங்கு முறை கடப்பிடித்தலும், அயராத உழைப்பும்,கோபமில்லாத்தன்மையும்,சாந்த குனமும்,அதிர்வில்லா பேச்சும்,தண்ணடக்கமும்,முதிர்ந்த அறிவுணர்வும்,ஆழ்ந்த சிந்தனையும் இவரின் சிறப்பு குணங்களாக அறியப்பட்டது.


பதவி ஆசை சிறிதும் இன்றி தன் வாழ்க்கையில் பயனித்த இவர் பல் வேறு சமூக நிறுவணங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்து கடமை ஆற்றியது கீழக்கரை சமுதாய பிரமுகர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சீதக்கதி நினவு நாள் விழாவினை திறம் பட நடத்திவைத்த செயலின் முழு உள்செயல்லாக்க வேலையினை சீதக்காதி, மற்றும், சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் முழுதும் அறிவர்.சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் தாளாளராக 1975 முதல் தனடு இறுதிகாலம் வரை கிட்டட்தட்ட 30 ஆன்டுகாலம் திறம் பட நிருவகித்தார்கள். தனது பணி காலத்தில் மானவர்களின் நலனில் பெரிதும் கவணம் செலுத்தி செய்த சேவகளுக்கு இன்றைய கீழக்கரை சேர்மன் அவர்களே சாட்சி.மேலும் கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் தனிகவனம் செலுத்தி மக்க்ளின் அரனாக நின்றத யாவரும் அறிவர்.

கீழக்கரை பைத்துல்மாலின் நிறுவன நிர்வாகிகளின் ஒருவரான இவர் அதன் உப தலைவராக தனது இறுதி காலம் வரை தொடர்ந்தார்.கீழக்கரை அணைத்து ஜமாத் கூட்ட்மைப்பின் பொருளாளராகவும்,மற்றும் இராம நாதபுரம் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இவர் செய்த சேவைகள் காலத்தில் அழியாதது.இவரின் செய்த சேவைகள் சில எல்லைகள் கடந்தது, பிரமிக்கதக்கது.


2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட சுகக்குறைவால் உடல் அவயங்களில் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் மருத்துவ பராமரிப்பில் இருந்த சமுதாய செம்மல் பஷீர் முகைதீன் அவர்கள் 2006, பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள், வியாழன் அன்று பகல் 11.35 மனியளவில் மதுரை அப்போலோ மருத்துவம்னையில் கால்மானார்கள். அண்ணாரின் உடல் பிப்ரவரி 3 ஆம் நாள் கீழக்கரை, நடுத்தெரு, ஜும்மாப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது

31 Jan 2007

இருமி யான்வர் (ஜனவரி 20 1991)



அப்சரான் பெனிசூலாவில்மார்க்கங்கள் சங்கமிக்கும்
அகன்ற ரஸ்தா...
அதரங்களில் நெருப்புப் பொறிகள்
வின்னை முட்டும் இடி முழக்கம்
விடுதலை வேட்கை பற்றிக் கொள்ளஅடைந்து
விடும் துடிப்புடன்
உயர்ந்து சிவந்த அஜரி வாலிபர்கள்
மணித் துளிகள் விரைகிறது எல்லையின்
முனையிலிருந்து
ஊர்ந்து வரும் டாங்கிகள்"கலைந்து செல்ல"
எச்சரிக்கை ஓசை எழுப்ப

கூர்வாள் நெஞ்சத்தினரின் மறுத்தல்கள்ககாகஸ்
மலை உச்சியில் எதிரொலிக்க
தட்ப வெட்ப நிலை மாறி பனியை அதிகரிக்கிறது

செம்படையினரின் வாசனை மூக்கை துளைக்கிறது
அழிவாயுதங்கள், நாசகாரிகளின் விசைகள்
கனப் பொழுதில்முடுக்கப்படயுத்த பிரளயம்,
வெட்ப விஷ வாயு, அக்கினி பிரவாகம்
புயல் ஓயும் பொழுதுபச்சை அங்கி செம்படைகள்
எண்ணிக்கையை தொடங்க
ஈராயிரம் உடல்கள் உயிரற்ற சடலமாக

இன்றும் ......இவர்களின் தீரம் வணங்கப் படுகிறது,
இந்துகுஸ் மலை அடிவார சமுதாய விடுதலையில்
இது வெறும் நிகழ்வல்ல ஜீவனுள்ள வேர்

அஜர்பஜானில், பாக்கு புற நகரில் நீலக் கடலும்,
மலை தாழும் சந்திக்கும்"கோபர்ஸ்தானில்" நாளும்
தீபங்கள் ஏற்றப் படுகிறதுநானும் ஏற்றிணேன்
சுதந்திர வசானை நறுமனமாக இங்கு வீசுகிறது