31 Jan 2007

இருமி யான்வர் (ஜனவரி 20 1991)



அப்சரான் பெனிசூலாவில்மார்க்கங்கள் சங்கமிக்கும்
அகன்ற ரஸ்தா...
அதரங்களில் நெருப்புப் பொறிகள்
வின்னை முட்டும் இடி முழக்கம்
விடுதலை வேட்கை பற்றிக் கொள்ளஅடைந்து
விடும் துடிப்புடன்
உயர்ந்து சிவந்த அஜரி வாலிபர்கள்
மணித் துளிகள் விரைகிறது எல்லையின்
முனையிலிருந்து
ஊர்ந்து வரும் டாங்கிகள்"கலைந்து செல்ல"
எச்சரிக்கை ஓசை எழுப்ப

கூர்வாள் நெஞ்சத்தினரின் மறுத்தல்கள்ககாகஸ்
மலை உச்சியில் எதிரொலிக்க
தட்ப வெட்ப நிலை மாறி பனியை அதிகரிக்கிறது

செம்படையினரின் வாசனை மூக்கை துளைக்கிறது
அழிவாயுதங்கள், நாசகாரிகளின் விசைகள்
கனப் பொழுதில்முடுக்கப்படயுத்த பிரளயம்,
வெட்ப விஷ வாயு, அக்கினி பிரவாகம்
புயல் ஓயும் பொழுதுபச்சை அங்கி செம்படைகள்
எண்ணிக்கையை தொடங்க
ஈராயிரம் உடல்கள் உயிரற்ற சடலமாக

இன்றும் ......இவர்களின் தீரம் வணங்கப் படுகிறது,
இந்துகுஸ் மலை அடிவார சமுதாய விடுதலையில்
இது வெறும் நிகழ்வல்ல ஜீவனுள்ள வேர்

அஜர்பஜானில், பாக்கு புற நகரில் நீலக் கடலும்,
மலை தாழும் சந்திக்கும்"கோபர்ஸ்தானில்" நாளும்
தீபங்கள் ஏற்றப் படுகிறதுநானும் ஏற்றிணேன்
சுதந்திர வசானை நறுமனமாக இங்கு வீசுகிறது

No comments:

Post a Comment